#BREAKING: ஆன்லைனில் ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு.?

Default Image

நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை ஆன்லைன் மூலம் நடத்தலாமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தேசிய தேர்வு முகமை கடிதம்.

நீட் தேர்வை இரண்டு முறை நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க நீட் தேர்வை 2 முறை நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ஒரே ஒரு முறை தேர்வு நடத்தப்பட்டால், அது மாணவர்களுக்கு மனா அழுத்தத்தை அதிகரிக்கும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமான முறையில் தேர்வு நடத்துவது சற்று சிரமம் என்பதால் ஆன்லைனில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. தற்போது, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு, மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்