நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியுடன் மாறி, மாறி முன்னிலையில் பெற்று வந்த நிலையில். மம்தா வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 216 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 0, மற்றவை 1 என முன்னிலை வகித்து வருகிறது. இது கிட்டத்தட்ட மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் முதல்வர் ஆகிறது உறுதி செயய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார். மம்தா இதன்பின் 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில், மேற்குவங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் முதல்வவர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சுவேந்து அதிகாரியுடன் மாறி, மாறி முன்னிலையில் பெற்று வந்த நிலையில் மம்தா வெற்றி பெற்றுள்ளார்.
இதில் சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே, நந்திகிராம் தொகுதியில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க வில்லை என்றால் அரசியலில் இருந்து விலகுகிறேன் என திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்தி அதிகாரி சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…