#BREAKING: மகாராஷ்டிரா – ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை!

Default Image

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவிப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்வதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி 902 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக மாஸ்க் அணிய தேவையில்லை என மகாராஷ்டிரா அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்