#Breaking:நில அபகரிப்பு வழக்குகள்;சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? – உச்ச நீதிமன்றம் கேள்வி..!

Published by
Edison

தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் நில அபகரிப்பு புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது .இதனை எதிர்த்து,தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படலாம் என அனுமதி வழங்கியது.அதன்பின்னர்,கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 36 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முத்துலெட்சுமி என்பவர் தனக்கு இழைக்கப்பட்ட நில மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க இதுவரை சிறப்பு நீதிமன்றம் செயல்படவில்லை.எனவே இந்த வழக்குகளை வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்தில் நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா?,எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும்,இது தொடர்பான தகவல்களை தமிழக அரசு 6 வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து,2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

25 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

28 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

60 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago