பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் முன்னாள் உதவியாளர் போலா யாதவை சிபிஐ கைது செய்தது.
பீகார் மாநிலம் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரிடம் சிறப்புப் பணி அதிகாரியாக (ஓஎஸ்டி) இருந்த போலா யாதவை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்தது. லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது நடந்த பணி நியமன முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரயில்வே ஆள்சேர்ப்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பீகாரில் சுமார் நான்கு இடங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு வருகிறது. பாட்னாவில் 2 இடங்களிலும், தர்பங்காவில் 2 இடங்களிலும் சோதனை நடந்து வரும் நிலையில், போலா யாதவ் இன்று காலை டெல்லியில் கைது செய்யப்பட்டார். பாட்னாவில் சோதனை செய்யப்படும் இடங்களில் ஒன்று போலா யாதவின் CA க்கு சொந்தமானது. யாதவ் 2004 மற்றும் 2009 க்கு இடையில் நடந்த ரயில்வே ஆட்சேர்ப்பு ஊழல் வழக்கின் முக்கிய நபர் என கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாட்னாவில் உள்ள முக்கிய சொத்துக்கள் விற்கப்பட்டன அல்லது அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ரயில்வே வேலைகளுக்கு ஈடாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் லாலு யாதவ், ராப்ரி தேவி, மிசா பார்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ கடந்த மே 18ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…