கேரள நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான மூணாறில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள ராஜமலை பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 12 பேர் மீட்கப்பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 70 முதல் 80 பேர் வரை வசித்து வந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலச்சரிவில் இன்னும் எத்தனை பேர் சேற்றுக்குள் சிக்கியுள்ளார்கள் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இவர்கள் இருக்கும் பகுதியை இணைக்கும் பாலம் நேற்று அடித்துச் செல்லப்பட்டதால், இப்பகுதியில் மீட்பு குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளா நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் 9 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காலை நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…
சென்னை - தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். தூக்கத்தில்…
ஸ்பெயின் : கால்பந்து போட்டிக்கான பிரீமியர் லீக் தொடர் தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஞாயிற்றுக்கிழமை…
ஹைதராபாத் : ஆந்திரா, தெலங்கானாவில் பிரபல யூடியூபராக வலம் வரும் ஹர்ஷா சாய் மீது, ஹைதராபாத் போலீசார் பாலியல் வன்கொடுமை…