உ.பி:6 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது;வாக்களித்தார் அம்மாநில முதல்வர் யோகி.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,இதுவரை 5 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில்,உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
அதன்படி,இந்த தேர்தலானது 57 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.இந்த தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே,உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 6வது கட்டமாக கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கன்யா நகர் க்ஷேத்ராதொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.
6 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 27% பேர் குற்ற வழக்குகளை எதிர்கொண்டிப்பவர்கள் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…