இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய ராணுவ முறையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு இன்று வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நம் இளைஞர்களுக்கு ராணுவ சேவை வாய்ப்பை வழங்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் இந்திய இளைஞர்களுக்கு ஆயுதப் படையில் சேர வாய்ப்பு அளிக்கப்படும். ‘அக்னிபாத்’ திட்டத்தின் கீழ், ஆயுதப் படைகளில் இளைஞர்களின் சுயவிவரத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கிய நிலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்புத்துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை மத்திய அரசு உருவாக்கியது. Tour of duty என்ற இந்த திட்டத்தில் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த நிலையில், அக்னிபாத் முறையில் சேரும் வீரர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள் என்றும் இந்தத் திட்டம் பல்வேறு துறைகளில் புதிய திறன்களுடன் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…