இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மௌமரே நகருக்கு அருகே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் காரணமாக மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் சுமார் 170,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…