குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகமதாபாத்தில் ஆளுநர் மாளிகை சென்ற அவர், ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
மேலும், அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தானே முதல்வராக நீடிக்கபோவதாகவும், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தை பொறுத்தவரையில், அம்மாநிலம் பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முதுகெலும்பாக காணப்படுகிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தேர்தல் நடவடிக்கைகள் காரணமாகவும், தனது தனிப்பட்ட உடல்நிலை காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜய் ரூபானி ராஜினாமா குறித்து கட்சி தலைமை சார்பாக எந்த அதிகாரபூர்வ வெளியிடப்படவில்லை. ஆனந்தி பென் படேலுக்கு பின், விஜய் ரூபானி 2016-ஆம் ஆண்டு முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…