கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. இதில் காங்கிஸ் 37 இடங்களிலும், கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. இதுபோன்று, ஆம் ஆத்மியும் தனித்து 39 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 21 இடங்கள் தேவை. கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. இருப்பினும், சுயேச்சை எம்எல்ஏக்கள், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. இதனால் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும் சட்டசபையில் பாஜக தனது பலத்தை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்தது.
கோவாவில் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து பிரமோத் சாவந்த் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். இந்த நிலையில், கோவா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 15, ஆளும் பாஜக 13, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி 6, சுயேட்சை 2, கோவா பார்வேர்டு கட்சி 1, ஆம் ஆத்மி கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும், கோவா மாநிலம் சாங்குலியம் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பிரமோத் சாவத் பின்னடைவை சந்தித்துள்ளார். இதுபோன்று பனாஜி தொகுதியில் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். எனவே, கோவா மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…