#BREAKING : ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி – பிரதமர் மோடி

Default Image
  • நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை.
  • ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன்படி, தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த உரையில், மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும்.

இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். இந்தியாவில் தாயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25% தடுப்பூசிகளை  நிறுவனங்கள் வாங்கலாம். தடுப்பூசிகள் குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்