அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அரியானா அரசு அறிவிப்பு.
ரக்ஷா பந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணத்தை பல்வேறு மாநிலங்கள் அறிவித்து வருகிறது.இந்த நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
ரக்ஷா பந்தன் விழாவையும், நாட்டின் 75வது சுதந்திர தினத்தையும் ஒருங்கிணைத்து கொண்டாடும் விதமாக இந்த முன்னெடுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…