#breaking: முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் காலமானார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் லக்னோவில் செப்சிஸ் மற்றும் பல்வேறு உறுப்பு செயலிழப்பு காரணமாக இன்று காலமானார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான 89 வயதான கல்யாண் சிங் லக்னோவில் செப்சிஸ் (sepsis) மற்றும் பல்வேறு உறுப்பு செயலிழப்பு காரணமாக இன்று காலமானார். கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்யாண் சிங்-க்கு நேற்று உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவருக்கு சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு மற்றும் நரம்பியல் பிரச்சனை இருந்தது. இதனால் அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், சிகிச்சை பலன்றி கல்யாண் சிங் செப்சிஸ் மற்றும் பல்வேறு உறுப்பு செயலிழப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் முதல்வராக ஜூன் 1991 முதல் டிசம்பர் 1992 மற்றும் செப்டம்பர் 1997 முதல் நவம்பர் 1999 வரை கல்யாண் சிங் இரண்டு முறை இருந்தார். அவரது முதல் ஆட்சிக்காலத்தில் தான் டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பாபர் மசூதி  இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் அப்போதைய பிரதமர் பிவி நரசிம்ம ராவின் அரசாங்கம் உத்தரபிரதேச அரசாங்கத்தை அதே நாளில் தள்ளுபடி செய்தது.

மேலும் கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தின் அட்ராலி நகரில் பிறந்த கல்யாண் சிங், முதன் முதலில் 1967 இல் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago