டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி மறுப்பு.
இந்தியாவை பொறுத்தவரையில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற தடுப்பூசிகளுக்கு 3-வது கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான 3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி மறுத்துள்ளது.
மற்ற தடுப்பூசிகள் 2 தவணையாக செலுத்தப்படும் நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி ஒரே தவணையில் போடப்படும் தடுப்பூசியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தடுப்பூசியால் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…