#BREAKING: டெல்லி வன்முறை ..! பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..! ராணுவத்தை வரவழைக்க  கெஜிர்வால் கோரிக்கை .!

Published by
Dinasuvadu desk

டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க  வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் கோரிக்கை வைத்து உள்ளார்.

டெல்லி வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வன்முறையை டெல்லி போலீசாரால் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவே வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைக்க  வேண்டும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு கோரிக்கை வைத்து உள்ளார். மேலும் டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 18- ஆக இருந்த நிலையில் தற்போது 20 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று முன்தினம் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், பஜன்புரா போன்ற  பகுதிகள் கலவர பூமியாக மாறியது.

இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டனர். இந்த சம்பவத்தால் நேற்று 13  பேர் உயிரிழந்தனர்.அதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இன்று  குருதேக் பகாதூர் மருத்துவமனை நிர்வாகம் மேலும் 5 பேர் உயிரிழந்தாக கூறியதால்  பலி எண்ணிக்கை 18- ஆக உயர்ந்து இருந்த நிலையில் மேலும் 2 பேர் இறந்ததால்  பலியானவர்களின் எண்ணிக்கை 20- ஆக உயர்ந்துள்ளது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

3 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

4 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

6 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

6 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

6 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

7 hours ago