நேற்று ஒரேநாளில் நடத்திய சோதனையில் டெல்லி அமைச்சர் வீட்டில் இருந்து ரூ.2.82 கோடி பணத்தை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.
டெல்லி மாநிலம் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி ரொக்கம் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்களை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று, சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், பணம், நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணபரிவர்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அமைச்சர் வீட்டில் இத்தனை கோடி ரூபாய் மற்றும் இத்தனை கிலோ தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் சத்யேந்தர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர்…
கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…