#BREAKING: 10 துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை அளிக்க முடிவு.!

Default Image

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித்துறைகளுக்கு சலுகை அளிக்கஉள்ளனர். அதன்படி, 10 துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், ஜவுளித்துறைக்கு ரூ.10,863 கோடி கோடியும், உணவுப் பொருட்கள் துறைக்கு ரூ.10,900 கோடிகோடியும், சோலார் மின் உற்பத்தி துறைக்கு ரூ.4500 கோடியும், இரும்பு உற்பத்தித் துறைக்கு ரூ.6322 கோடியும், ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.57042 கோடியும் ஊக்கத்தொகை வழங்கப்படும்  என  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார்.

ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு முதலீடுகள் அதிகரிக்கும் எனவும்  சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என கூறியுள்ளார். மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கும் ,ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் பத்து முக்கிய துறைகளுக்கான  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இந்த திட்டம் இந்திய உற்பத்தியாளர்களை உலகளவில் போட்டிக்கு உட்படுத்தும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் என  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 11 02 2025
NarendraModi -Thaipoosam
India vs England 3rd ODI
champions trophy 2025 india squad
aadhav arjuna - prashant kishor
kanja karuppu
riyan parag