BREAKING:இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6761 ஆகவும், பலி எண்ணிக்கை 206 உயர்வு.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. இதனால் தினமும் பாதிப்பும் ,உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க தவிர வேற எதற்காகவும் பொதுமக்கள் வெளியில் வர கூடாது என மத்திய , மாநில அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  6,412 -லிருந்து 6761 ஆகவும் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 199-லிருந்து 206 ஆக அதிகரித்துள்ளது என  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504 -லிருந்து 516 ஆக உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்  1,364 பேரும் ,தமிழ்நாட்டில்  834  பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMKProtest
CBSE Exam
Rohit sharma - Ravindra Jadeja - Virat kohli
Loksabha Opposition leader Rahul gandhi
kuldeep or chakaravarthy
PinkAuto
Vijay - Annamalai -Seeman