இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கொவிட்-19 வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169ஐ எட்டியுள்ளது. மேலும் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 3 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போது பஞ்சாப்பை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…