இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் இன்று 4.30 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 327ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டிய நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஏற்கனவே, கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…