#Breaking: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1397 ஆக உயர்வு.! பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.!

Default Image

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,18,699 ஆக அதிகரித்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,784 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,73, 197பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் தற்போது நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 லிருந்து 1397 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லிருந்து 35 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து 124 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கப்பட்ட மாநிலம் கேரளா 234, மகாராஷ்டிரா 216, தமிழ்நாடு 124 பேரும் அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்