சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளை ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியானது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தோ்வுகளை நடத்த மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், இந்தியாவில் கொரோனா பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பொதுத் தோ்வுகளை நடத்துவது லட்சக்கணக்கான மாணவா்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகும்.
மேலும், 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேர்வை ரத்து செய்து, நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளுக்கு உள் மதிப்பீட்டுத் தோ்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்திரவு விட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து குறித்து முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இ-யும் பதில் கொடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முடிவு செய்துள்ளதாகவும், சிபிஎஸ்இ தேர்வு நடத்த இயலாது என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கருத்து தெரிவித்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…