அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியா நாட்டிற்கு சென்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு காய்ச்சல் ,சளி போன்றவை இருந்ததால் கொரானா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகத்தில் அவர் தொடர் கண்காணிப்பிலும் இருந்தார்.இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவர் உயிரிழப்பிற்கு கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இவரின் மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்ய மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்த நிலையில் தற்போது அந்த முதியவர் கொரோனா வைரசால் தான் இறந்தார் என்பது உறுதியாகியுள்ளது.
இதனால் கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…