#BREAKING: கேரளாவில் ஒரே நாளில் 32,819 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

Published by
பாலா கலியமூர்த்தி

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 5170 ஆக அதிகரித்துள்ளது. தற்போது,  2,47,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று 1,41,199 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 1,53,54,299 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18,413 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை 12,07,680 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கோழிக்கோடு 5015, எர்ணாகுளம் 4270, மலப்புரம் 3251, திருச்சூர் 3097, கோட்டயம் 2970, திருவனந்தபுரம் 2892, பாலக்காடு 2071, கண்ணூர் 1996, ஆலப்புழா 1770, கொல்லம் 1591, பதனம்திட்டா 1163, வயநாடு 968, காசர்கோடு 906 மற்றும் இடுகி 859 என பாதிக்கப்பட்டிள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 5,27,662 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 5,06,202 பேர் வீட்டு / நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும், 21,460 மருத்துவமனைகளில் உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

2 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

6 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

7 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

7 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

7 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

8 hours ago