நந்திகிராம் தொகுதியில் மம்தா பாணர்ஜி வெற்றி பெரிதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சுவேந்த அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிப்பு.
மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 213 இடங்களிலும், பாஜக 78 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 0, மற்றவை 1 என முன்னிலை வகித்து வருகிறது.
இது கிட்டத்தட்ட மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் முதல்வர் ஆகிறது உறுதி செயய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார். இதன்பின் 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில் சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் 52815 வாக்குகளும், சுவேந்து அதிகாரி 62677 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய குளறுபடிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் நான் நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்ததாக செய்திகள் கிடைக்கிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும், எனக்கு அதைப்பற்றி கவலையில்லை, மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் எனில் சின்ன தோல்விகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.நந்திகிராம் தொகுதி முடிவுகளைப் பற்றி கவலை இல்லை, மக்களின் முடிவை மதிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்,
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…