#BREAKING: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் சந்திரசூட்!

Default Image

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி,  உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் டி.ஒய்.சந்திரசூட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை படி, 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை 2 ஆண்டுகள் சந்திரசூட் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதிவில் இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பரிந்துரை கடிதத்தை நீதிபதிகள் முன்னிலையில் டி.ஒய்.சந்திரசூட்டிடம் தலைமை நீதிபதி யு.யு.லலித் வழங்கினார். இதனிடைய, டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி.சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் 16-வது தலைமை நீதிபதியாக 7 ஆண்டுகள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்