#Breaking: ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வு.!

Default Image

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், தற்போது சிபிஎஸ்இ தேர்வுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. இதனை மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் நேரடியாக தொலைக்காட்சி மூலம் தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் கூறப்படுகிறது. 

இதனிடையே கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் 3 ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு, நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு ஜூலை 26ம் தேதியும், JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்