#BREAKING: சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு ரத்து.! முடிவை ஏற்ற உச்சநீதிமன்றம் .!

Default Image

சிபிஎஸ்இ  10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளை ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தோ்வுகளை நடத்த மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வந்தனர்.

பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். தேர்வை ரத்து செய்து,  உள் மதிப்பீட்டுத் தோ்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்திரவு விட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த  முடிவு செய்துள்ளதாகவும், சிபிஎஸ்இ தேர்வு நடத்த இயலாது என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கருத்து தெரிவித்தனர்  என மத்திய அரசு கூறியது.

இந்நிலையில், மத்திய அரசு  சிபிஎஸ்இ  10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய  தாக்கல் செய்த அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்