#BREAKING : 2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் – அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட்..! – பிரதமர் மோடி

Default Image

மிகவும் சிறப்பான பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட் என பட்ஜெட் தாக்கல் குறித்து பிரதமர் மோடி உரை. 

நிதியமைச்சர்  சீதாராமன் அவர்கள், 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து  நரேந்திரமோடி அவர்கள் உரையாற்றியுள்ளார்.

அவர் கூறுகையில்,  சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக பல தரப்பில் இருந்தும் வரவேற்பு பெற்றுள்ளது. விவசாயிகள், ஏழைகள் மத்திய பட்ஜெட்டால் பயன்பெறுவர்.

மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட். உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், கங்கை நதிக்கரையோரம் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் சிறப்பானது. விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை இந்த பட்ஜெட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்