BREAKING :மகாராஷ்டிராவில் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் ..!

Default Image

கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றனர்.இதை தொடர்ந்து காங்கிரஸ் ,தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.
அந்த மனுவில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யவும் , நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் தீர்ப்பை இன்று  உச்சநீதிமன்றம் வழங்கியது.
அதில் நாளை மாலை 5 மணிக்குள்  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து அஜித் பவார் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மை இல்லை என கூறி  முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதன் பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஸ்யாரியை சந்தித்து கொடுத்தார்.இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பாஜக எம்எல்ஏவான காளிதாஸ் கொலம்ப்கர் ஆளுநர் மாளிகையில் சபாநாயகராக பதவியேற்க உள்ளார்.இவர் நாளை எம்எல்ஏகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என  தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்