#BREAKING : உ.பி தேர்தலுக்கான கூட்டணியை அறிவித்தது பாஜக..!

Default Image

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கட்சியின் தேசிய  தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், உத்திரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கட்சியின் தேசிய  தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பின் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி 403 தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்