இந்திய நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்.
மத்திய அரசு விரைவில் புதிய மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரை நியமிக்க உள்ளதாகவும், தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் வி.ஆனந்த நாகேஸ்வரன் நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக (CEA) டாக்டர் ஆனந்த நாகேஸ்வரன் நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மாசசூசெஸ்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆனந்த நாகேஸ்வரன்.
2019-2021 ஆண்டுக்கான பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் பகுதி நேர உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1994 மற்றும் 2011 க்கு இடையில் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல தனியார் செல்வ மேலாண்மை நிறுவனங்களுக்கு மேக்ரோ-பொருளாதார மற்றும் மூலதன சந்தை ஆராய்ச்சியில் பல தலைமைப் பாத்திரங்களை அவர் வகித்துள்ளார். பிப்.1-ல் மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…