#BREAKING : காற்று மாசு அதிகரிப்பு – டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Default Image

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் நாளைமுதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவு. 

டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வாகன பயன்பாட்டை குறைக்குமாறும்,  அலுவலகத்திற்கு சென்று பணிபுரிவோர் வீட்டில் இருந்து பணிபுரியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், காற்றுமாசு நாளுக்குநாள் அதிகரித்து தான் வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் நாளைமுதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், காற்றின் தரம் உயரும் வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்