#Breaking:காற்று மாசுபாடு…3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கலாமா? – அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Published by
Edison

டெல்லி:காற்று மாசுபாட்டைக் குறைக்க வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் என்று டெல்லி அரசு பல்வேறு யோசனைகளை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு முக்கிய காரணம் தூசி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே,அதனைக் குறைக்க 3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு நிரந்தர தீர்வு தேவை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும்,டெல்லி அரசாங்கம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், மாசுபாட்டை சமாளிக்கக்கூடிய அளவில் வைத்திருக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்க பொதுமுடக்கத்தை அமல்படுத்த தயார் என்று டெல்லி அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில்,தற்போது அதற்கு நிரந்த தீர்வு தேவைப்படுவதாகவும்,3 நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள டெல்லி அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.அதில்,”பயிர்க்கழிவுகளை எரிப்பதால் 10% மட்டுமே காற்று மாசுபடுகிறது என்று கூறி,டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களை இயக்க தடை விதிக்கலாம்,வாகன நிறுத்த கட்டணங்களை நான்கு மடங்கு உயர்த்தலாம்,மெட்ரோ ரயில் சேவையை அதிகரிக்கலாம் ,திறந்த வெளியில் கழிவுகளை எரிப்பதை தடுத்து நிறுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,”இவை நீண்டகால யோசனை,ஆனால் காற்று மாசுபாட்டை குறைக்க எங்களுக்கு தேவை உடனடியான யோசனை மற்றும் நடவடிக்கையே,அந்த வகையில் டெல்லியில் ஒரு வாரத்திற்கு பொதுமுடக்கம் மற்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கலாம்”,என்று கூறியுள்ளனர்.குறிப்பாக, டெல்லியில் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை நாளை மாலைக்குள் அமல்படுத்த வேண்டும் என்று  டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Recent Posts

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

28 minutes ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

1 hour ago

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

5 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

6 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

7 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

8 hours ago