பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவத் மான் போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்து.மேலும்,தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர்,ஒரு விழா நடைபெறுவதையொட்டி,தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில்,பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக பகவத் மான் போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.மேலும்,பகவத் மான் பஞ்சாப் மாநிலத்தை பெருமையடைய செய்வார் என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவத் மான்,பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை எம்.பி. ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…