#Breaking:தமிழகத்திற்கு உடனடியாக 30.6 டிஎம்சி நீர் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு….!

Published by
Edison

தமிழகத்திற்கு உடனடியாக 30.6 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக காவிரி நதிநீர்  மேலாண்மை ஆணையத்தின் 13 வது ஆலோசனைக்கூட்டம்,நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக இன்று டெல்லியில்  நடைபெற்று வருகிறது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லி சேவா பவனில் நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான, சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.மேலும்,கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 4 மாநிலங்கள் சம்மதித்தால் மட்டுமே மேகதாது அணை பற்றி விவாதிக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில்,தமிழகத்திற்கு ஜூன்,ஜுலை,ஆகஸ்ட் மாதங்களுக்கு தரவேண்டிய 30.6 டிஎம்சி நிலுவையை உடனே தரவேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

18 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

24 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

24 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

24 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

24 hours ago