#Breaking:உக்ரைனில் உள்ள இந்தியர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் – இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு!

Default Image

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எந்த முன்னறிவிப்பின்றி எல்லைகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

உக்ரைனை,ரஷ்யா தொடர்ந்து தாக்கி ஆக்கிரமித்து வரும் நிலையில்,அங்குள்ள இந்தியர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில்,உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் அண்டை நாடுகள் வழியாக மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் பணி நடைபெறும் நிலையில்,எந்தவித முன்னறிவிப்பின்றி இந்தியர்கள் எல்லைகளுக்கு செல்ல வேண்டாம் என தற்போது இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும்,உக்ரைனில் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பது எல்லையைவிட பாதுகாப்பானது என்று இந்திய தூதரகம் கணித்துள்ளது.அதே சமயம்,தூதரக அதிகாரிகள்,தூதரக அவசர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.உக்ரைன் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் இந்திய தூதரகம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்