பிரேசில்-இந்தியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Published by
Venu
  • பிரேசில் அதிபர் பொல்சொனரோ மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையே சந்திப்பு நடைபெற்றது.
  • இந்த சந்திப்புக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த  குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்,தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

விமானநிலையம் வந்த மெசியாஸ் போல்சொனாரோவிற்கு  இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர்.இதனையடுத்து நேற்று பிரேசில் அதிபர்  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசினார்.இதன் பின் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோவை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர்.அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் அரசு மரியாதை வழங்கப்பட்டது.இதையடுத்து பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்தும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் வர்த்தகம்  இணையதள பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட15 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், பிரேசில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. பிரேசில் அதிபரின் வருகையால் இந்தியா மற்றும் பிரேசில் உறவில் புதிய அத்தியாயம் உருவாகும் என்று பேசினார்.இதேபோல் பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ பேசுகையில்,ஏற்கனவே இந்தியா மற்றும் பிரேசில் இடையே வலுவான இருந்து வருகிறது. 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம் உறவு மேலும் வலுவடையும் என்று பேசினார்.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago