ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அருகிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு வேலி மீது இன்று ஒரு பாகிஸ்தனை சார்ந்த ஒரு நபர் ஊடுருவ முயன்றபோது எல்லை பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் வேலியைக் கடந்து மறுபுறம் சென்றபோது வீரர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர், அந்த பகுதியைத் தேடியபோது அந்த நபர் இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அதிகாலை 1 மணியளவில் எல்லையில் உள்ள பகாசர் பகுதியில் நடந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு எல்லை பாதுகாப்பு படை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊடுருவ முயன்ற நபரை அடையாளம் காணுமாறு பாக்கிஸ்தான் ரேஞ்சர்களிடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கேட்டுள்ளது என்றும், பாகிஸ்தான் பதிலளித்த பின்னர் அவர் குறித்து மேலும் விவரங்கள் கிடைக்கப் பெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பாக்கிஸ்தான் தரப்பில் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்பு படை கவனித்து வருகிறது என கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…