எல்லைப் பிரச்சினையை எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் ஆகியோர் சென்றனர். இதைத்தொடர்ந்து, ஸ்டக்னா பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய சாகச நிகழ்ச்சிகள் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
பின்னர், ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே என்ன நடந்தது, எல்லையில் பாதுகாத்த சிலர் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். அவர்களை இழந்ததால் வருத்தப்படுகிறேன். அவர்களுக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன் என தெரிவித்தார்.
எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், அதை எந்த அளவிற்கு தீர்க்க முடியும் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், எங்கள் நிலத்தின் ஒரு அங்குலம் கூட உலகின் எந்த சக்தியினாலும் எடுக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிந்தால், இதைவிட சிறந்தது எதுவுமில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…