கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

கேரள முதலமைச்சரின் அலுவலகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.

Kerala CMO bomb threat

திருவனந்தபுரம் :கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர்.

முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நேற்றைய தினம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது, பின்னர் தீவிர  பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு அது ஒரு புரளி என்று உறுதி செய்யப்பட்டது. கூடுதலாக, ஹில்டன் கார்டன் இன் மற்றும் கோகுலம் கிராண்ட் ஹோட்டல் உட்பட நகரத்தில் உள்ள பல ஹோட்டல்களுக்கு கடந்த சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

இதையடுத்து, தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் வெடிபொருட்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்ல. பிரதமர் மோடி மே 2ம் தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.