தெற்கு பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள ஐடியல் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததும் காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அரை மணி நேரத்திற்குள், தடுப்பு நடவடிக்கையாக 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து மேற்கு பெங்களூரு டிசிபி லக்ஷ்மன் பி நிம்பர்கி கூறுகையில், “மாணவர்களை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் மோப்ப நாய் படை பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தியது.பள்ளி வளாகத்தின் ஒவ்வொரு மூலையிலும் போலீசார் ஆய்வு செய்தும் எதுவும் கிடைக்காததால் இந்த மிரட்டல் ஒரு புரளி போல் தெரிகிறது என்றார்.
இதனிடையே, இச்சம்பவத்தால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…