Rameshwaram Cafe: பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் இன்று பிற்பகல் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில் “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான்.
முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும். போலீசார் சம்பவ இடத்திலேயே உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கவலைக்கிடமாக இல்லை, ஆனால் பலர் காயமடைந்தனர். சிசிடிவி ஆய்வு செய்யப்படுகிறது, சிசிடிவி காட்சிகளில் ஒருவர் ஓட்டலில் பையை விட்டுச் சென்றுள்ளார் என சித்தராமையா தெரிவித்தார். அந்த பையில் இருந்த பொருள் தான் ஓட்டலில் குண்டு வெடிப்பை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் முதல்வர் டி.கே.சிவகுமார், “எங்கள் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். யார், ஏன் செய்தார்கள். இது வணிகப் போட்டியா? என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. அனைத்து வீடியோக்களும் உள்ளன. எங்களிடம் 2-3 கிமீ சுற்றளவில் பயணித்தவர்களின் தகவல் உள்ளது. பீதி அடையத் தேவையில்லை என கூறினார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…