Categories: இந்தியா

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு! பெண் ஒருவர் உயிரிழப்பு!

Published by
கெளதம்

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியான காட்சிகளில் அனைவரும் அலறி ஆங்காங்கே ஓடிகிறார்கள்.

காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிர படுத்தினர். மேலும், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானிக்கு புதிய கொலை மிரட்டல்…ரூ.20 கோடி இல்லை ரூ.200 கோடி..!

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று களமசேரி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், என்ன மாதிரியான குண்டுகள் என்பது குறித்து 4 பேர் கொண்ட என்ஐஏ குழு உள்ளூர் போலீசாருடன் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

காசாவில் மீண்டும் இணைய சேவை தொடக்கம் – பாலஸ்தீனம்!

ஒருவர் உயிரிழந்து, இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உறுதி செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்
Tags: #Blast#Kochi

Recent Posts

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

29 seconds ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

22 minutes ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

2 hours ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

3 hours ago