Categories: இந்தியா

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு! பெண் ஒருவர் உயிரிழப்பு!

Published by
கெளதம்

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்ததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியான காட்சிகளில் அனைவரும் அலறி ஆங்காங்கே ஓடிகிறார்கள்.

காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிர படுத்தினர். மேலும், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானிக்கு புதிய கொலை மிரட்டல்…ரூ.20 கோடி இல்லை ரூ.200 கோடி..!

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று களமசேரி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், என்ன மாதிரியான குண்டுகள் என்பது குறித்து 4 பேர் கொண்ட என்ஐஏ குழு உள்ளூர் போலீசாருடன் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

காசாவில் மீண்டும் இணைய சேவை தொடக்கம் – பாலஸ்தீனம்!

ஒருவர் உயிரிழந்து, இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உறுதி செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்
Tags: #Blast#Kochi

Recent Posts

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

22 minutes ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

32 minutes ago

கலைஞர் நூற்றாண்டு அகாடமி : பாக்ஸிங்-ஐ கண்டு கழித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை :  சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…

45 minutes ago

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

1 hour ago

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

2 hours ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

3 hours ago