விமான நிலையத்தில் வெடிகுண்டு பையால் பரபரப்பு.!

Default Image
  • கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்து உள்ளது.
  • பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்து உள்ளது.இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த  பாதுகாப்பு படையினர் மங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. அந்த பையை மீட்டு வெடிகுண்டு மீட்பு வாகனத்தில் வைத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து உள்ளனர்.

மேலும் அந்த பை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாநிலத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களும் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.அடுத்த சில நாள்களில் குடியரசு தினம் வருவதை ஒட்டி பயங்கரவாதிகள் அதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
madurai court - cbcid
shyam selvan Manoj Bharathiraja
RIP Manoj
TN GOVT
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh