ஆபாச புகைப்பட குழு.! போய்ஸ் லாக்கர் ரூம்! போலீசிடம் வசமாக சிக்கிய +2 மாணவன்.!

Published by
மணிகண்டன்

பல சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டு வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட போய்ஸ் லாக்கர் ரூம் (Bois Locker room)  இன்ஸ்டாகிராம் சேட் குரூப் அட்மின் டெல்லி போலீசால் கைது செய்யபட்டான்.

டெல்லி சைபர் கிரைம் போலீசார் நேற்று போயிஸ் லாக்கர் ரூம் (Bois Locker room)  இன்ஸ்டாகிராம் சேட் குழு அட்மினை கைது செய்தனர். அந்த குழுவில் பல சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டு வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  இன்ஸ்டா குழு அட்மினிற்கு 18 வயதுதான் ஆகிறது எனவும், இந்த ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வினை எழுதியவன் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஹரிஷ் கான் கூறுகையில், ‘ சம்பந்தப்பட்ட இன்ஸ்ட்டா குழுவில் 20 இளைஞர்கள் இருந்தனர். அந்த குரூப்பில் பல பெண்களின் ஆபாச போட்டோக்களை ஸ்க்ரீன் சாட் எடுத்து அதனை தனக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அனுப்புவார்கள்’ என அவர் தெரிவித்தார். 

மேலும் ஹரிஷ் கூறுகையில், ‘ போட்டோக்களை பகிர்ந்த இளைஞன் என் நண்பன். எனவே, அந்த குரூப்பில் என்ன நடக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் தெரிவிக்க முயற்சி செய்ய நினைத்தேன். அதனால், இன்ஸ்டாகிராமில் இதற்கென ஒரு குழுவை உருவாக்கி அதில் பாதிக்கப்பட்ட பெண்களை அவரவர்களின் இன்ஸ்டா ஐடி மூலம் குரூப்பில் இணைத்தேன். அந்த குரூபில் 10 சிறுமிகளை சேர்க்க முடிந்தது. ஆனால், அவர்களில் சிலர் பயந்தார்கள்.’ என்று ஹரிஷ் கூறினார்.

‘அந்த இளைஞர்கள் குழுவின் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஆபாச செய்திகளும் பல பெண்களின் புகைப்படங்களும் கிடைத்தன.’ என்றும் அவர் கூறினார். மேலும், ‘ அந்த குழுவில் உள்ள சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பழக்கமில்லாதவர்கள். அவர்கள் அனைவரும் வயது குறைவானவர்களாக இருந்தனர்.’ எனவும் தெரிவித்தார்.

மேலும், ‘பெண்களுக்காக அமைக்கப்பட்ட குழுவில் எந்த ஒரு தவறான கருத்தும் பகிர்ந்தது கிடையாது எனவும், அனைவரும் தங்கள் கசப்பான அனுபவங்களை குரூப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். அது மற்ற பெண்களின் ஆதரவைவும் அவர்களுக்கு விழிப்புணர்வாகவும் இருந்தது’ எனவும் அந்த நபர் தெரிவித்தார். 

ஹரிஷ் மேலும் கூறுகையில், தனது வேலை முடிந்தவுடன் குழுவிலிருந்து வெளியேறியதாக குறிப்பிட்டார். ஆனால், போலிஸ் புகாரில் தனது பெயர் எப்படி பதிவு செய்யப்பட்டது என தனக்கு தெரியாது’ என்றும் குறிப்பிட்டார். 

கடந்த திங்களன்று, அந்த இன்ஸ்டா குழு உறுப்பினராக இருந்த ஒரு சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் குழுவில் இருந்த சிறுபான்மையினர் உட்பட பத்து உறுப்பினர்கள் டெல்லி போலீசால் அடையாளம் காணப்பட்டுள்ளனராம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago