பீகார் நூடுல்ஸ் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பெலா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள நூடுல்ஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் கொதிகலன் (பாய்லர்) வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தகவல் கிடைத்ததும் மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.
சத்தம் மிகப் பெரியதாக இருந்ததால், அதன் சத்தம் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் கேட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைக்கு வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணத்தை முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…