Categories: இந்தியா

வயநாடு நிலச்சரிவு., முதன் முதலாக தகவல் கொடுத்த பெண் சடலமாக மீட்பு.!

Published by
மணிகண்டன்

வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் 350க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. 6 நாட்கள் கடந்தும் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகளில் காணாமல் போனவர்களின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் சூரல்மலையை சேர்ந்த நீது ஜோஜோ எனும் பெண்ணின் உடலை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்த நீது ஜோஜோ கொடுத்த முதல் தகவலின் பெயரில் தான் மீட்புப்படையினருக்கு நிலச்சரிவு நடந்தது பற்றி முதல் தகவல் தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது.

வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனமான விம்ஸ் (WIMS) நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நீது ஜோஜோ. இவர் தனது 5 வயது மகன் மற்றும் கணவருடன் சூரல்மலை பகுதியில் வசித்து வந்துள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட நாளில், நள்ளிரவு தனது வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததாகவும், தங்களை காப்பாற்ற கோரியும், தான் பணிபுரிந்த விம்ஸ் நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக நீது கூறியுள்ளார். அதன் பெயரில் தான் விம்ஸ் நிறுவனம் மீட்புப்படையினருக்கு நிலச்சரிவு பற்றிய தகவலை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் துரதஷ்டவசமாக நீது ஜோஜோ, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் 5 நாட்களுக்கு பிறகு நேற்று தான் சாலியாறு பகுதியில் மீட்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரது உடலில் அணிந்து இருந்த ஆபரணங்களை கொண்டு நீதுவின் உறவினர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

நீதுவின் கணவரும், 5 வயது மகனும் நிலச்சரிவில் இருந்து உயிர்பிழைத்து உள்ளனர். மீட்கப்பட்ட நீதுவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், சூரல்மலை புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நீது ஜோஜோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வயநாடு பற்றி முதன் முதலாக தகவல் கூறிய நீது ஜோஜோ உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

2 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

3 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

4 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

4 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

5 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

5 hours ago