Categories: இந்தியா

வயநாடு நிலச்சரிவு., முதன் முதலாக தகவல் கொடுத்த பெண் சடலமாக மீட்பு.!

Published by
மணிகண்டன்

வயநாடு நிலச்சரிவு : கடந்த ஜூலை 30ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் 350க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துள்ளது. 6 நாட்கள் கடந்தும் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகளில் காணாமல் போனவர்களின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் சூரல்மலையை சேர்ந்த நீது ஜோஜோ எனும் பெண்ணின் உடலை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். உயிரிழந்த நீது ஜோஜோ கொடுத்த முதல் தகவலின் பெயரில் தான் மீட்புப்படையினருக்கு நிலச்சரிவு நடந்தது பற்றி முதல் தகவல் தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது.

வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனமான விம்ஸ் (WIMS) நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நீது ஜோஜோ. இவர் தனது 5 வயது மகன் மற்றும் கணவருடன் சூரல்மலை பகுதியில் வசித்து வந்துள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட நாளில், நள்ளிரவு தனது வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததாகவும், தங்களை காப்பாற்ற கோரியும், தான் பணிபுரிந்த விம்ஸ் நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக நீது கூறியுள்ளார். அதன் பெயரில் தான் விம்ஸ் நிறுவனம் மீட்புப்படையினருக்கு நிலச்சரிவு பற்றிய தகவலை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் துரதஷ்டவசமாக நீது ஜோஜோ, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் 5 நாட்களுக்கு பிறகு நேற்று தான் சாலியாறு பகுதியில் மீட்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரது உடலில் அணிந்து இருந்த ஆபரணங்களை கொண்டு நீதுவின் உறவினர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

நீதுவின் கணவரும், 5 வயது மகனும் நிலச்சரிவில் இருந்து உயிர்பிழைத்து உள்ளனர். மீட்கப்பட்ட நீதுவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், சூரல்மலை புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நீது ஜோஜோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வயநாடு பற்றி முதன் முதலாக தகவல் கூறிய நீது ஜோஜோ உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

11 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago