அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் ஜோராட் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மா கமலா என்ற எந்திர படகு புறப்பட தாயாராக இருந்த நிலையில், அவ்விடத்திற்கு மற்றொரு படகு வந்துள்ளது. இதனால் வரும் படகிற்கு இடம் அளிக்க மா கமலா படகு சற்று நகர்ந்துள்ளது. மா கமலா படகில் 120 பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் படகு நகர்ந்த போது எதிரே வந்த படகின் மீது மோதியுள்ளது.
இதில் மா கமலா படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதன் காரணத்தால் அதில் இருந்த 120 பயணிகளும் ஆற்றில் மூழ்கியுள்ளனர். இதில் சிலர் நீச்சல் அடித்து கரையேறியுள்ளனர். மேலும், பலர் நீரில் மூழ்கியதை தொடர்ந்து அவ்விடத்திற்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் விரைந்து மீட்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று மீட்பு பணியில் ராணுவமும் இணைய உள்ளது. இந்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 3 பேர் காயமடைந்துள்ளனர். 42 பேர் இந்த ஆற்றிலிருந்து மீட்கபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆற்றில் மூழ்கியுள்ள 70 பேரை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…